Wednesday, September 26, 2007

இன்றைய சூப்பர் ஸ்டார்

இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கிறது என்று இந்திய தற்போதைய கேப்டன் தோனி கூறுகையில் இளம் வயதில் ஒரு சாதனை படைத்ததோடு இந்திய நாட்டிற்கு பெருமை தந்த வீரர் ஆக திகழ்கிறார். அவருக்கு எத்தனை பாராட்டு விழா வைத்தாலும் ஒரு தவறும் இல்லை. இன்று காலை 12 மணிக்கு ரசிகர்கள் அவர்களை மும்பை வான்கடே மைதானத்தில் பார்த்து பரசவப்படும் போதும் நானும் கண்டு ரசித்தேன். எத்தனை ஆயிரம் மக்கள் தான் இந்த வெற்றியை கொண்டாடுகிறார்கள். தோனி இப்போது கோடி அதிபதியாக இருப்பார். இந்த நல்ல நேரத்தில் இந்தியாவில் ஏழை மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏன் அவருடைய ஜார்க்கண்ட் என்னும் மாநிலத்தில் இருக்கும் வறுமைக்கு கீழ் வாழும் மக்களுக்கு எதாவது நன்மை செய்தார் என்றால் நான் இன்னும் ஒரு படி மேல் அவரை வணஙகுவேன். ஏன் என்றால் நானும் தோணியின் ரசிகன்.

No comments: