Thursday, September 27, 2007

கிராமம் ரொம்ப முன்னேறி விட்டது.

சுமார் ஒரு வருடம் கழித்து நான் என்னுடைய சொந்த கிராமத்திற்கு மும்பையிலிருந்து சென்றேன். எல்லோரும் நலம் விசாரித்தார்கள். நானும் நலம் என்று பதில் சொல்லி முடிப்பதற்குள் எல்லோரும் சரி ராத்திரி பார்ப்போம் என்று கிளம்பி சென்று விட்டார்கள். நானும் ஒரு நிமிடம் குழம்பி விட்டேன். எல்லோரும் ஒரே சொல்லே சொல்லுகிறார்களே என்று .

இரவு 7 மணி இருக்கும் நான் என்னுடன் சேர்ந்து வந்திருக்கும் நண்பர்களிடம் பேசி கொண்டு இருக்கும் போது ஒவ்வொரு வராக வரத் தொடங்கி விட்டார்கள் என்ன விசயம் என்று கேட்டால் ஆளுக்கு ஒரு குவாட்டர் வேணும் என்று தான் சொல்கிறார்கள். எனக்கு ஒரே சங்கடம் ஆகிவிட்டது. நாம் நாள் கழித்து நம்முடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை பார்க்க ஊருக்குள் வந்தால் எனக்கு ஒரு குவாட்டர் வேணும் மட்டும் சொல்கிறார்கள். இவர்களை நாம் என்ன சொல்வது

அதுவும் அந்த ஊரில் ஏதாவது திருவிழா மட்டும் நடந்து விட்டால் போதும் சொல்லவே வேண்டாம் அந்த டாஸ்மாக் கடையில் 20 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆகி விடுகிறது. என்ன சொல்ல இப்போ கிராமம் ரொம்ப முன்னேறி விட்டது என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது. அதே போல் எல்லா இளைஞர்களை நான் குறிப்பிட வில்லை என்னிடம் குவாட்டர் மட்டும் பார்ட்டி கேட்டது குறைந்தது 40 பேராக இருக்கும் அதுவும் நான் ஒரு வாரத்திற்கு தான் விடுமுறை எடுத்து விட்டு சென்றேன்

தமிழ்நாட்டில் எப்போதும் இந்த கிராமத்தில் இருந்து டாஸ்மாக் கடையை எடுப்பார்கள் அப்போது தான் இந்த கிராமம உறுப்படும் எனக்கு வெட்கமாக தான் இருக்கு என்னுடை கிராமத்தை பற்றி தப்பாக எழுதுவது என்ன செய்ய இப்போ எல்லா கிராம்தில் இந்த மாதிரி தானே நடக்கிறது. யாரும் இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்

No comments: