Friday, October 19, 2007

கோயில் என்பது என்ன?

இது எல்லோருக்கும் தெரியாது. ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான் அதுவே அவன் ஒரு கோயில் உள்ளே சென்ற பின் அவனுக்கு கடவுள் நம்பிக்கை வருவது இல்லையோ ஆனால் சாந்தமாக மாறி விடுகிறான். அதுவே ஒரு முடி நம்பிக்கையாக நான் நினைத்து விட முடியாது.

அதேபோல் மற்ற பூஜைகள் செய்கிறார்கள் அது நமக்கு முடி நம்பிக்கையாக தெரிகிறது. ஏன் இப்படி ஒரு கல்லுக்கு இவ்வளவு மரியாதை செய்து அதை வழிப்பாடுகிறார்கள் என்று எல்லோருக்கும் தோன்றுகிறது. நம்முடைய வீட்டில் நம் முன்னோர்கள் இறந்து விடுகின்றனர் நான் என்ன செய்கிறோம் அவர்களுக்கு பிடித்த பண்டங்கள் மற்றும் துணிகளை வாங்கி அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

இதுவே நாளடைவில் அது சாமியாக மாறிவிடுகிறது. இன்று நாட்டில் அமைதியான இடமாக எந்த இடத்தை சுட்டி காட்ட முடியும். சரி அதை விடுங்கள் ஒருவன் பிரபல ரவுடியாக இருக்கலாம் ஆனால் ஒரு கோர்ட் வளாகத்தில் கொலை செய்வான் தவிர கோயிலுக்குள் கடவுள் பக்தியுள்ள ரவுடி கொலை செய்வானா.

நாட்டில் ஏராளமாக போலி சாமியார்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று உங்களுக்கு தெரியும் அதாவது கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவன் கடவுள் பெயரை சொல்லி எமாற்ற மாட்டான் ஏன் என்றால் கடவுள் தண்டணை கொடுக்கும் என்று அவனுடைய நம்பிக்கை அதுவே கடவுள் நம்பிக்கை இல்லாதவனே ஒரு போலி சாமியாக வலம் வர முடியும். எத்தனையோ பேர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்த்தவர்களாக மாறி இருக்கிறார்கள் இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை அதுவே கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்துவாக மாறி இருப்பவர்கள் யாரும் இருக்கிறார்கள். அதாவது கிறிஸ்தவ மதம் என்பது வெளிநாட்டினர் மதம் அவர்கள் இந்தியா வந்தார்கள் எல்லோரையும் பணம் கொடுத்து மதம் மாற சொன்னார்கள் அதே போல் அவர்களும் மாறி விட்டனர்.

இதில் விசேசம் என்னவென்றால் அவர்களின் பெயர்களை மாற்றி விடுகின்றனர் இது எவ்வளவு மதக் கொடுமை ஒருவன் பிறக்கும் போது ஒரு பெயர் வளரும் போது ஒரு பெயர் இவர்களை யாரையும் தடுத்து நிறுத்தியிருக்கிறார்களா? இந்த முட நம்பிக்கையாளர்கள். முடியாது ஏன் என்றால் அவர்கள் பணம் வைத்திருக்திருக்கிறார் அதன் மூலம் காரியத்தை சாதித்து விடுவார்கள். இடையில் மாட்டுவது இந்த இந்து தான்.

இடையில் ஜெயலலிதா மதமாற்ற சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் அன்றைய எதிர் கட்சி திமுக அதை எதிர்த்தது. அதே போல் கோயில்களில் ஆடு பண்றிகளை பலியிடக் கூடாது என்று அறிவித்தது அதுவையும் மறைமுகமாக எதிர்த்தது.

Thursday, October 18, 2007

இந்தியா நம்பர் 1

1. கிரிக்கெட் மொத்தம் 12 நாடுகள் விளையாடுகிறது அதில் இந்தியா 6 வது இடம்.
2. ஹாக்கி மொத்தம் 10 நாட்டில் இந்தியா 8 வது இடம்
3. கால்பந்து 117 வது இடம்
4. ஒலிம்பிக்கில் 67 வது இடம் இவ்வளவும் விளையாட்டில் இந்தியா இருக்கும் நிலைமை.
உண்மையிலே நாம் இந்த விளையாட்டில் இந்தியா நம்பர் 1 இடத்திற்கு வர வேண்டும் என்று எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்போம் இதுவரை வந்திருக்குதா? ஆனால் சத்தமே இல்லாமல் நாம் முதலிடம் பிடித்திருக்கும் எதில் தெரியுமா உலக வங்கியில் கடன் வாங்கும் நாடுகளில் இந்தியா நம்பர் 1 என்ற முதலிடம் பிடித்திருக்கிறது. இதற்கு காரணம் யார் என்று உங்களுக்கு தெரியும் .

1. அரசியல் வாதிகள் (குறிப்பிட்ட)
2. தொழிலதிபர்கள் (குறிப்பிட்ட)
3. விளையாட்டு வீரர்கள் (குறிப்பிட்ட)
4. சாதிபிரிவினர்கள்(குறிப்பிட்ட)
5. மதப்பிரிவினர்கள்(குறிப்பிட்ட)

உலக வங்கியிடம் ஆட்சியில் இருக்கும் இந்த அரசியல்வாதிகள் கடன்களை வாங்கி ஏழை மற்றும் சாலை நாட்டிற்கு இதர செலவுக்காக வாங்குகிறார்கள் பிறகு அதை உரிய முறையில் செலவு செய்யாமல் ஊழல் செய்கிறார்கள் அதில் அரசு அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது. தொழிலதிபர்கள் ஒழுங்காக வரி கட்டாமல் இருக்கிறார்கள் இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள் இவர்கள் ஜெயிப்பார்களா இல்லது தோற்பார்களா என்று ஒரு கோஷ்டியே பெட் கட்டிக் கொண்டு இருக்கிறது. இவர்களால் நாட்டுக்கு ஒரு நல்லபெயர் இல்லாமல் கடைசியில் தோல்வியடைந்து நாட்டிற்கு துரோகம் செய்கின்றனர்

மதப்பிரினர்கள் தங்களுக்கு தான் இடஒதுக்கீடு வேண்டும் என்று வாதாடுகின்றனர்.

சாதிப்பிரிவனர்கள் கலவரங்கள் மற்றும் தன்னுடைய சாதி மட்டும் சமுதாயத்தில் வளர வேண்டும் என்று எண்ணுகின்றனர. இதனால் இந்தியா இப்போது உலக வங்கியிடம் கடன் வாங்கி விட்டு நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது. உலகவங்கியும் கடன்களை இந்தியாவிற்கு தாரளமாக வழங்குகிறது ஏனெனில் அப்பதான் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவிற்கு வந்து கொள்ளை அடிக்க முடியும் அமெரிக்கா சொலற படி கேட்க வேண்டும். இதனால் பாதிப்பு அடைவது என்னவோ இந்திய மக்கள்தான். காலம் கடந்து போச்சு இதிலிருந்து மீள இன்னும் இந்தியாவிற்கு முடியுமா முடியாதா என்ற நிலை இருக்கிறது. இதற்கு கவலை படுவது யாருமில்லை.

மொத்தம் ரூ.15.662 கோடி கடன் வாங்கயிருக்கிறது. இதுவே ஒரு நாடு உலக வங்கியிடமிருந்து வாங்கும் அதிகபட்ச தொகையாகும்.

Tuesday, October 16, 2007

வருது வருது கலைஞரின் 2 புதிய சேனல்கள்

அட இப்பதான் கலைஞர் டிவி வந்தது அதுக்குள்ள இசையருவி, 24 தமிழ் செய்தி ஆகிய இரு புதிய டிவிகளையும் ஒளிபரப்புவதற்கு ஆயத்த மாகிறார்கள். இவர்களுக்கு மக்களின் மேல் என்ன பெரிய பாசம் இருந்ததிட போகிறது.

முதலில் முரசொலிமாறன் மகனின் பெயரில் டிவி ஆரம்பித்தவர்கள் பிறகு அதன் பங்குகளை வாங்கிவிட்டு இப்போது புது சேனல் தொடங்கி ஒரு மாதம் ஆகிறது அதற்குள் 2 புதிய சேனல்களை துவங்க இருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி செய்து வருவது நல்லது தான் என்று திமுக காரன் மட்டும் சொல்வான். ஏன் என்றால் அந்த காலத்திலேயே எம் ஜி ஆர் எதிர்த்தார். அதனால் திமுகவிலிருந்து விலகி தனியொரு கட்சி ஆரம்பித்து அதை வெற்றி பெறும் கட்சியாக பெயர் எடுக்க வைத்தவர் எம்ஜிஆர். அப்படி பட்டவரே வெறுத்து ஒதுக்கும் நிலையில் இருந்த கலைஞர் பின்னாளில் அதாவது எம்ஜிஆர் இல்லை என்றாலும். அதிமுக மட்டும் அவரை எதிர்த்தது. மற்றவர்கள் எல்லாம் கலைஞரை ஆதரித்தனர்.

ஏன் ஏதற்கு என்ற காரணம் மட்டும் மக்களுக்கு புரியவில்லை. ஜெயலலிதா மாதம் 1 ரூபாய் சம்பளம் வாங்கி விட்டு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்விகளை சன்டிவி மூலம் படம் பிடித்து காட்டியவர் இந்த கலைஞர் ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கலைஞர் நினைக்கிறார். திமுகவுக்காக ஒரு டிவி வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கலைஞர் திமுக டிவி மூலமாக தான் பரவுகிறதா. ஏன் இப்போது ஆரம்பிக்க போகும் இசையருவி அவருடைய கட்சியை பலப்படுத்துமா?

ஒன்று மட்டும் தெரிகிறது. இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு டிவி மட்டும் பார்க்க தெரியும் என்று நினைக்கிறார் போலும்.

விரைவில் சட்டமன்ற தேர்தல் வராது. அதனால் நாம் என்ன செய்தாலும் தமிழ் மக்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறார்.

என்ன செய்வது நாம் இந்த பிளாக்கரில் மட்டும் தான் எழுத முடியும் வேறு என்ன செய்ய முடியும்

நான் நினைக்கிறேன். எவ்வளவு பேர் பிளாக்கர் ஏழுதுகிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி ஏது மக்களுக்கு தேவை இல்லை என்றதொரு கருத்தருங்கும் நடத்தி அதில் ஏது தேவைபடுகிறது அதை நிறைவேற்றிட பாடுபட வேண்டும். ஏன் என்றால் இந்த காலத்தில் அரசியல் வாதிகள் பின்னாளில் போவதை விட நம்மால் செய்ய முடியுமா?

Friday, October 12, 2007

தனியார் vs அரசாங்கம்

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.அதில் தனியார் மற்றும் அரசாங்கம் ஊழியர்களின் சம்பள விவரங்களை பற்றி எழுதியிருந்தது. அதாவது அரசாங்கம் வேலை பார்க்கும் நபர்க்கு அதிகமாக தனியார் கம்பெனிகளில் வேலை பார்க்கும் நபர்க்கு அதிகமாக கிடைக்கிறது.

இதில் வேதனை என்னவென்றால். எஸ்பிஐ என்ற அரசாங்க பேங்கில் வேலை பார்க்கும் மேனேஜர்க்கு கிடைக்கு சம்பளத்தில் இருந்து இரண்டு மடங்கு தனியார் பேங்கில் வேலை பார்க்கும் நபர்க்கு கிடைக்கிறது. இதில் என்ன விசயம் தெரிகிறது. என்றால் நல்லா படித்தவர்கள் தனியார் துறைக்கு தான் போவார்கள் என்று தெரிகிறது. அதே போல் அரசாங்க வேலைக்கான தகுதி இல்லாத நபர் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி விடுவார். பின்பு எப்படி அரசாங்கம் முன்னேறும்.

2020 இந்தியா வல்லரசு தான் ஆனால் தனியார் நிறுவனத்தால் தான் வல்லரசு ஆக முடியும்.

ஆக இந்த வளர்ச்சியே இந்தியா முன்னேற்றத்திற்கு வழியாக தெரிகிறது. இருந்தாலும் அரசாங்க வேலைக்காக இப்போது எல்லா இளைஞர்களும் தயாராக இல்லை இதனால் அரசாங்க சம்பந்த பட்ட வேலைகள் எப்படி வளரும். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் நிறைய சம்பளம் கொடுத்து இன்றைய இளைஞர்களை கவர்கின்றனர். அதே போல் தகுதியே இல்லாத ஆளுக்கு இன்று அரசாங்கத்தில் வேலை சுலபமாக கிடைக்கிறது. என்ன செய்ய முடியும்?

Friday, October 5, 2007

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றுவேன். என்று அடம் பிடிக்கும் காரணம்.

1) தனக்கு பிறகு தன்னுடைய மகனை அரியணையில் அமர வைக்கும் ஆசையில் இருக்கும் கருணாநிதியின் தந்திரம்

2) ஏராளமான அரசாங்க ஊழியர்கள் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள் இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் ஏராளமான பணம் செலவழிக்கப்படும் அதில் அரசாங்க ஊழியர்களுக்கு எப்படி கமிஸன் கிடைக்கும்.

3) கர்நாடகம் - காவேரி, ஆந்திரம் -பாலாறு, கேரளா - பெரியாறு. ஆகிய நதிப் பிரச்சனைகளில் இல்லாத ஆர்வம் இந்த சேது சமுத்திர திட்டத்திற்கு மட்டும் இவ்வளவு அக்கறை காட்டுவது என்ன வென்றால். இதற்கு அடிக்கல் நட்டியது பிஜேபி. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. ஆக இந்த இரு கட்சி ஆரம்பித்த ஒரு செயல் தானே அதை நாம் முடித்து வைத்தால் ஆட்சிக்கு நல்ல பெயர் வரும் என்று நப்பாசை தான்.

4) ஏற்கனவே நான் சொன்ன மாதிரி தன் மகனை அரியணையில் ஏற முடிவு எடுத்திருக்கும் கலைஞர் அந்த தருணம் இதுதான் என்ற மாதிரி தமிழர்களின் எத்தனை பேர் இந்துக்கள் இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் அவர்கள் மதிக்கும் தெய்வமான ராமரைப் பற்றி இழிவாக பேசினால் அதன் மூலம் ஒன்னு தேர்தல் இரண்டாவது கலைஞர் என்னால் முடியவில்லை வயதாகிவிட்டது நான் என்னுடைய பெரியார் வழியில் பயணிக்கப் போகிறேன்.எனக்கு இந்த பதவி ஒரு தடங்கலாக இருக்கிறது என்ற தந்திரம் இருக்கலாம்.

5. மக்கள் தொகை பெருகி வரும் நாடுகளில் ஒன்றான நாம் சூற்று சுழலையும் ஆராயவேண்டும். பழைய காலத்தில் அரசியல் வாதிகள் தாங்களாகவே ஒரு திட்டம் போட்டு அதன் அழிவுகளை பற்றி கூறாமல் நன்மைகளை மட்டும் கூறி திட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால்....... இந்த கால கட்டத்தில் மிடியா + இண்டர்நெட் செய்தி என்று காலத்தில் இன்னும் அதன் நன்மைகளை மட்டும் கூறி ராமரை சண்டைக்கு இழுப்பது அவருடைய நாத்திகத்தின் மீது அவர் கொண்டு இருக்கும் அறியாமை காட்டுகிறது.

Wednesday, October 3, 2007

டாப் டென் இந்தியா

கீழே இருக்கும் இந்த லிங்கை காப்பி பேஸ்ட் செய்து விடியோ கிளிப்பை பாருங்கள்

http://videos.oneindia.in/watch/1645/india-among-top-10.html

Monday, October 1, 2007

மகாத்மா காந்தி இந்த பெயரை இன்றைய பிளாக்கரில் யாரும் எழுதவில்லை

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "சுதந்திர இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவரால் புது தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பகவத் கீதை, சமண சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒரு மகான் சுதந்திரத்தை நமக்கு பெற்று தந்திருக்கிறார். அவர் வழியில் போகாமல் ஏதோ தமிழகம் முழுவதும் பந்த என்று தான் மட்டும் கூறி கொண்டு அதை எல்லோரையும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்களை மட்டும் இன்று நிறைய பேர் பிளாக்கரில் நல்லவர்கள் வல்லவர்கள் என்று ஏழுதுகிறார்கள். ஏன் இவர்கள் மட்டும் இப்போது பிரிக்க வில்லையா நீ மதவாதக்காரன். நான் நாத்தீகன். இன்று மதவாதிகள் ஜெயித்துவிட்டார்கள். என்றாலாம் எழுதுகிறார்கள் அப்போ இவர்களும் ஒரு மத பிரியர்களா? அதாவது நாத்திகன் என்ற மதபிரியர்களா? என்று கேட்கிறேன்.

நமக்கு எத்தனை அருமையான காந்தியடிகள் கிடைத்தார் பிறகு அவரை பற்றி இன்றைக்கு யாராவது பிளாக்கரில் ஏழுதுகிறார்களா? இன்று பிளாக்கரில் இவ்வளவு சுதந்திரம் கிடைத்திருக்கது எல்லாமே காந்தியடிகளாரில் உறுதியான மனநிலைதான். இன்று எந்த தலைவருக்கு அந்த மன தைரியம் இருக்கிறது. சும்மா நாத்திகன் நாத்திகன் என்று எழுதினால் என்ன பயன். ஒருவனை பார்த்து பைத்தியம் பைத்தியம் என்று கூறினால் பைத்தியம் தீருமா நானும் ஒரு நாத்திகன் தான் ஆனால் யாருடைய மனதையும் புண் படுத்தாமல் தான் நானும் எல்லாருடையும் பழகுவேன். ஏன் என்றால் நாம் ஒருவனை இழிவான சொற்களால் பேசினால் அவனும் அப்படியே பேசுவான். அதுவே ஒரு நல்ல வார்த்தைகளால் அவனிடம் பேசினால் எப்படியும் அவனும் நல்ல வார்த்தைகளால் பேசுவான்.

இவருடைய பிறந்தநாள் அன்றாவது இவரைப் பற்றி வாழ்த்தி பெருமைகளாக பிளாக்கரில் எழுதுவார்கள் என்று நம்பிக்கையுடன் என்னுடைய உரையை முடித்து கொள்கிறேன்.